அன்னை என்றொரு முன்னறி தெய்வம்
ரத்தம் சரியாக இல்லை என்றார்கள் சாதரணமான ஜுரம் போலத்தான் வந்தது- மாடியில் இருந்த கல்கி பகவான் டிவோடியான லேடி டாக்டர் கொஞ்சம் கூடவே பீஸ் வாங்கிய பின் அங்க அங்க கருப்பா இருக்கு ரத்த ஸ்பெஷலிஸ்ட் கிட்ட காமிச்ச தேவலை என்றார்-
வாரம் ஒருதடவை குத்தி எடுத்து இது சரியில்லை என்றார்கள் சரியில்லை என்றால் என்ன- தேவையான அளவு சுரப்பதில்லை சரியான க்வாலிடி யும் சுரப்பதில்லை ஆக இரண்டு அளவை களிலும் குறை-
மருந்து மாத்திரைகள் குடலை உண்டு இல்லை என காளியின் ஆயுதம் ராக்ஷசன் உடலில் இறங்கும் காட்சியை நினைவூட்டும் - காலைக் கடன் அம்மா திருப்பிக்கொடுக்க திண்டாடியது லூஸ் என்ற ஒரு திரவத்தின் thayavil சில நாள் ஆட்டுப் புழுக்கை என ... அந்த வஜிப்தார் எதை எதையோ விட்டு வெளிக்கொண்டு வரும் நாட்கள் எழுபது வயதில் அம்மாவுக்கு மீண்டும் பிரசவ வேதனை-
நானும் மனைவியும் சிம்ம சொப்பனம்- கையில் கஞ்சி அல்லது சுண்டல் சூப் அம்மாவின் ஜன்ம விரோதிகள் - இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை தாதரில் ரத்தம் ஏத்த போகும் அவசியம் அம்மாவுக்கு இது அந்த இடத்தில் பால் மணம மாறா ஒரு இளம் சிறுமியின் மூலமாக புரிந்தது- அவளும் அதற்கே வந்தாள் என்று தெரிந்த போது-
இரண்டு வாரம் ஒரு வாரம் ஆகும் என்றார்கள் - அம்மா அழ ஆரம்பித்தாள் வலி என்றோ உபத்திரவம் என்றோ அல்ல- எங்களுக்கு உபத்திரம் என்றே
விடாமல் பஞ்சாக்ஷர ஜபம் லலிதா மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமங்கள்
எனது வங்கியின் டாக்டர் சொன்னார் இது டெர்மினல் இல்நெஸ்- ரத்தம் தினம் கொடுக்கும் நிலைக்கு வரும்போது பாடி ரத்தத்தை ரிஜெக்ட் செய்யும் ஆனால் ரத்தம் அவசியம் தேவையும் படும் பிட்ஸ் வரும் .. கொடுமை கொடுமை யான காட்சிகள் ..
அம்மா எங்களுக்குத் தெரியாமல் சீக்கிரம் பயணம் வேண்டி வேண்டிக்கொண்டாள் - அப்படித்தான் தோன்றியது
நாங்களும் தெய்வங்களைஎல்லாம் நொந்து கொண்டு இவ்வளவு தீவிர பக்தைக்கு அருளாத அதெல்லாம் தெய்வங்களா என்று வெறுத்துக் கொண்டாலும் நாங்களும் எங்களையே நொந்துகொண்டும் வேறுவழி தெரியாது அதே தெய்வங்களையே வேண்டிக்கொண்டோம் சீக்கிரம் கூட்டிக் கொள் என்று
இதற்கு மாத்திரம் அருள் செய்த அவர்களை எல்லாம் என் செய்ய ? இப்போது என் மனைவி பஞ்சாக்ஷர ஜபம் எடுத்துக்கொண்டிருக்கிறாள் -
நான் இரண்டும் கெட்டானாகவே மனைவிக்கு காட்டிகொள்ளாமல்
பிழைத்துக் கிடப்பது தெய்வங்களும் ஜெபங்களும் யுகம் யுகமாக அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி, எள்ளு பாட்டி என ---------
A.தியாகராஜன் |
தங்களின் கவிதைகளை ரசித்தேன். தங்களின் ஹைக்கூ கவிதைகள் அருமை. அவ்வப்போது வரும் ஹைக்கூ விமர்சனங்களை படித்திருக்கிறேன்.
முடிந்தால் எனது இணையதளத்தை பார்த்து விமர்சிக்கவும் அவசியமாக .
http://kavithaivaasal.blogspot.in/
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.
நன்றி. அவசியம் செய்கிறேன்.
வணக்கம்
I also request you to use slightly smaller fonts for Tamizh which are available on quillpad.